“பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு”

272

இன்றைய நிலையில் வரிசையில் நிற்காமல் எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.

காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதற்காக மக்கள் தற்போது வழிபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர் இப்போது அரசியல் ஆதாயங்களை எப்படிப் பெறுவது என்று சிந்திக்கிறார்கள் என்றார்.

ஓரிரு மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை கிடைத்த பின்னர் இந்த நாட்டில் வங்குரோத்து முத்திரை அகற்றப்படும் எனவும் அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here