அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;
“.. நான் ஒருநாளும் பின்னோக்கிச் செல்லும் நபர் அல்ல, சவால்களுக்கு முகங்கொடுப்பவன். என் மீது எந்த சூழ்ச்சிகள் மேற்கொண்டாலும் நான் பயப்பட மாட்டேன். எனக்கு வழக்குத் தாக்கல் செய்தவர்கள் தான் சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். நான் நீதிமன்றினை மதிப்பவன். சட்டத்தினை மதிக்கிறேன். நீதிமன்றுக்கு தலை வணங்குவேன். நான் நெல்சன் மண்டேலாவின் சரிதையை நன்கு படித்துள்ளேன். எனக்கு எப்படியான வதைகள் தந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது கட்சியின் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ன் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என தெளிவாகக் கூறுகிறேன்..” எனத் தெரிவித்திருந்தார்.