“ரணிலின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும்”

812

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன், அவர் ஒவ்வொரு இரவும் அழைப்பாரா என்பது எனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பதுதான் இப்போது தேட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திசைகாட்டியில் ஏற்பட்டுள்ள எழுச்சியால் பிற்போக்கு சக்திகள் அச்சம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here