மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்ட சீனாவில் மக்கள் தொகை குறைய துவங்கியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது
இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு பரிகாரமாக சிச்சுவான் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அவர்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், திருமணமாகாத தம்பதிகளும் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
முன்னதாக, திருமணமாகாத பெண்கள் குழந்தைகளைப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டது.