follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP3இன்று முதல் கறுப்பு மாதம் பிரகடனம்

இன்று முதல் கறுப்பு மாதம் பிரகடனம்

Published on

இன்று(01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக கருப்பு ஆர்ப்பாட்ட மாதமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்ட மாதம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் சமந்த கோரளேஆரச்சி கருத்து தெரிவித்தார்.

அதற்கமைய, அனைத்து வைத்தியசாலைகளுக்கும் முன்பாக மதிய போசன நேரத்தில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற வரி விதிப்பு காரணமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான வைத்தியர்கள் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் ஐம்பதுக்கும் அதிகமான மின் பொறியியலாளர்கள் தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மின் பொறியலாளர் சங்கத்தின் இணைச்செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கிஸ்ஸ கொலையின் சந்தேக நபர்கள் மூவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூலுதாகொட வீதியில் பாழடைந்த காணியொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை இன்றைய தினம் (05) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...