follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுகத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை

கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை

Published on

கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருட்தந்தை இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“அந்நியக் கடன் தவணை கட்ட முடியாமல் பொருளாதாரத்தில் திவாலான நாட்டில், 30%க்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடக்கும் நாட்டில், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகள் உள்ள நாட்டில், வேலை இழக்கும் நாட்டில், தொழில்கள் வீழ்ச்சியடைந்து வரும் நாட்டில், சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்த நாட்டில், மனித உரிமைகள் மீறப்படும் நாட்டில், 200 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவழித்து பெருமையாக கொண்டாட என்ன சுதந்திரம் என்று கேள்வி எழுப்புகிறோம். 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடியவில்லையா? இது மக்களுக்கு எதிரான பெரும் குற்றமும் வீண் விரயமும் ஆகும். சுதந்திர விழாவில் காரத்தினால்கள் பங்கேற்க மாட்டார்கள். எந்த கத்தோலிக்க தலைவரும் இதில் பங்கேற்க மாட்டார்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...