தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (1) ஆரம்பமாகவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான நாளிதழ் விளம்பரம் இன்றைய நாளிதழ்களில் வெளியிடப்படும்.
எதிர்வரும் 15ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இருபத்தியோராம் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் சபைகளின் பதவிக் காலம் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.