நேபாள வெளிவிவகார அமைச்சர் நாளை (02) இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நேபாள வெளியுறவு அமைச்சர் வைத்தியர் பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை (02) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின நிகழ்வில் கௌரவ அதிதியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.