follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராக உள்ளோம்"

“வாக்காளர் அட்டைகளை அச்சிட தயாராக உள்ளோம்”

Published on

பதினான்கு மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.

அச்சுக்கூடத்தில் வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகளுக்கு போதுமான காகிதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அச்சகத் தலைவர், இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் தேவையான விளம்பரங்களை அச்சிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

339 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஊடக அதிகாரி, தற்போது வாக்காளர் அட்டைகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

339 உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்கள் அரச அச்சகத்திற்கு கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துப் பட்டியல்களும் கிடைத்தவுடன் விசேட வர்த்தமானி மூலம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் தொடர்பான அச்சுப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் செலுத்தும் அளவுக்கு அச்சகத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...