follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொழும்பை அபிவிருத்தி செய்ய கொழும்பில் பெறப்படும் வரி வருமானம் போதுமானது

கொழும்பை அபிவிருத்தி செய்ய கொழும்பில் பெறப்படும் வரி வருமானம் போதுமானது

Published on

கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்கு கொழும்பில் பெறப்படும் வரி வருமானம் போதுமானது எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக அதனை தீர்க்க முடியவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலி பல்தசார் (Vraie Cally Balthazaar) டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பலதரப்பட்டவை எனவும் அவர்களின் பிரச்சினைகளை வர்த்தக சமூகம், தோட்ட சமூகம், நகர்ப்புற மத்தியதர வர்க்கம் என தனித்தனியாக இனங்காண வேண்டும் எனவும், கொழும்பின் வருமான முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளப்பட்டால் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் திருமதி வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.

இவ்விடயங்களைத் தனித்தனியாக ஆராய்ந்து தேசிய மக்கள் சக்தியாக தீர்வுகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த வ்ராய் கெலி பல்தசார் நீண்டகாலமாக நடைபெற்று வரும் கொழும்பு மக்களின் வரி விரயம் நிறுத்தப்பட்டு அது நன்மை பயக்கும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...