கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்கு கொழும்பில் பெறப்படும் வரி வருமானம் போதுமானது எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக அதனை தீர்க்க முடியவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலி பல்தசார் (Vraie Cally Balthazaar) டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
கொழும்பு வாழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பலதரப்பட்டவை எனவும் அவர்களின் பிரச்சினைகளை வர்த்தக சமூகம், தோட்ட சமூகம், நகர்ப்புற மத்தியதர வர்க்கம் என தனித்தனியாக இனங்காண வேண்டும் எனவும், கொழும்பின் வருமான முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளப்பட்டால் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் திருமதி வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்தார்.
இவ்விடயங்களைத் தனித்தனியாக ஆராய்ந்து தேசிய மக்கள் சக்தியாக தீர்வுகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்த வ்ராய் கெலி பல்தசார் நீண்டகாலமாக நடைபெற்று வரும் கொழும்பு மக்களின் வரி விரயம் நிறுத்தப்பட்டு அது நன்மை பயக்கும் என்றார்.