ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு 197 குடும்பங்களுக்கு பெப்ரவரி 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.