follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுமாகாண சபை அதிகாரப் பகிர்வு என்பது ரணிலின் அரசியல் வியூகம்

மாகாண சபை அதிகாரப் பகிர்வு என்பது ரணிலின் அரசியல் வியூகம்

Published on

தூக்கில் தொங்குவதற்கு கயிறு இல்லாமல் அரசியல் ரீதியாக ஆதரவற்ற நிலையில் இருந்த விமல் வீரவன்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கில் தொங்குவதற்கு கயிற்றை வழங்கியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் நிறைவேற்ற முடியாத மாகாண சபை அதிகாரப் பகிர்வு குறித்த தலைப்பை முன்வைக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சியின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபை முறைமையை ஒருபோதும் முழுமையாக அமுல்படுத்த மாட்டார் எனவும் அதற்குப் பதிலாக சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தி அரசியல் ரீதியாக தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ளும் வியூக அரசியல் நடைமுறையை கையாண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தற்போதுள்ள மாகாணசபை முறைமைக்கு பதிலாக புதிய அதிகாரப் பகிர்வு வேலைத்திட்டம் தொடர்பில் தமது கட்சியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளமொன்ருக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...