பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரிஷியா ஸ்கொட்லண்ட் தலைமையிலான குழுவினர் நேற்று (02) பாராளுமன்றத்தில் சபாநாயகரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவை சந்தித்தனர்.
அங்கு, நாட்டில் கல்வி முறையை மேம்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கலை பிரபலப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய துறைகளில் வாய்ப்புகளை அடையாளம் காண்பது குறித்து இரு தரப்பினருக்கும் இடையே விரிவான விவாதம் நடைபெற்றது.