follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்சீன இறக்குமதிகளை கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை

சீன இறக்குமதிகளை கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை

Published on

சீனாவில் இருந்து தனது நாட்டுக்கு பொருட்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்தியா இந்நடவடிக்கையை எடுக்க தயாராக உள்ளது.

அதன்படி, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு வரி மற்றும் வரி அல்லாத கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை 2020ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக கோவிட் தொற்றுநோய் காரணமாக, சீனா தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, சீனா மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் கட்டுப்பாடு காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 28% ஆக அதிகரித்தது. இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் பொருட்களின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாகவும் கருத்து உள்ளது.

எனினும், மருந்துப் பொருட்கள், மின் சாதனங்கள், இரசாயனங்கள் உள்ளிட்ட பல வகைகளை சீனாவில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும் என்பதால், இந்தத் திட்டம் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது இன்னும் மதிப்பிடப்படவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...