மக்களின் இறையாண்மையால் ஆட்சிக்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களும் மக்களுக்கு சேவையாற்றாமல் தமது பிழைப்புக்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பொடியால், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் சன்ஷுகே டேக், மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.