follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடை

பொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் நன்கொடை

Published on

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வான்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அடையாளமாக கையளிக்கப்பட்டன.

வாகனங்களை அவதானித்த ஜனாதிபதி, ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சருடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை இலகுபடுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கம் இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஷுகோஷி ஹிடேகி மற்றும் ஜப்பானிய தூதுக்குழுவினர், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழும்புகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...