follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1அரசியலமைப்பு சபை நாளை மீண்டும் கூடுகிறது

அரசியலமைப்பு சபை நாளை மீண்டும் கூடுகிறது

Published on

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை நாளை (06) பிற்பகல் 03 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 25ம் திகதி முதல் முறையாக கூடிய அரசியலமைப்பு சபை, ஜனவரி 30ம் திகதி மீண்டும் கூடியது.

ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அதற்கான விண்ணப்பங்களை வரவேற்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி பெப்ரவரி 1ம் திகதி முதல் 15ம் திகதி வரை ஆணைக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் உள்ளது.

ஏற்கனவே வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள அரசியலமைப்பு சபையின் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...