வர்த்தகர் கொலை : சந்தேக நபர் ஒருவர் கைது

449

தலங்கம, பெலவத்தையில் வர்த்தகரின் மரணம் தொடர்பில் 27 வயது சந்தேக நபர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலவத்தையில் நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து வர்த்தகர் ஒருவர் சடலமாக கடந்த 2ம் திகதி மீட்கப்பட்டார்.

ஆடை விற்பனையில் ஈடுபட்டு வந்த 50 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவருக்கு சொந்தமான வீட்டின் நீச்சல் தடாகத்திலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here