நாளை ரணிலின் சிம்மாசன உரையை கேட்க செல்வோரும், புறக்கணிப்பவர்களும் இதோ

1336

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு, நாளை ஆரம்பமாகவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அநுர குமார திஸாநாயக்க, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பங்கேற்க தீர்மானித்துள்ளன.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி அமர்வினை புறக்கணிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளன.

மேலும், நாளைய கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  • மேலே குறிப்பிட்ட தகவல் அரசியல் வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here