follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசரண குணவர்தனவுக்கு பிணை

சரண குணவர்தனவுக்கு பிணை

Published on

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) பிணை வழங்கியுள்ளது.

இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது அரசாங்க வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை (13,680,000) மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

01.08.2006 முதல் 2007 ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட சரண குணவர்தனவிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதுடன், அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிக்கு பயணத்தடை விதித்து வழக்கை மீண்டும் மே 04ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...