follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசரண குணவர்தனவுக்கு பிணை

சரண குணவர்தனவுக்கு பிணை

Published on

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) பிணை வழங்கியுள்ளது.

இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது அரசாங்க வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒரு கோடியே முப்பத்தாறு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவை (13,680,000) மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

01.08.2006 முதல் 2007 ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இந்த முறைகேடு இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட சரண குணவர்தனவிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதுடன், அவரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பிரதிவாதிக்கு பயணத்தடை விதித்து வழக்கை மீண்டும் மே 04ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...