follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1“நான் பிரபலமாக இருக்க இங்கு வரவில்லை"

“நான் பிரபலமாக இருக்க இங்கு வரவில்லை”

Published on

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கிறார்.

ஜனாதிபதியின் உரையின் பின்னர் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரிவிதிப்புக்கான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவு என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

“சமீப காலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் நாட்டு மக்களின் அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முடிந்தது. தற்போது பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமாகிவிட்டது. மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இலங்கையை பாதுகாப்பான தூரத்திற்கு கொண்டு வர முடிந்தது. இந்தப் பயணம் இலேசானது ஒன்றல்ல.. ஆனால் பயணம் இன்னும் முடிவடையவில்லை, வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த அரசாங்கம், நிதி அமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது…

“நினைவில் கொள்ளுங்கள், நான் பிரபலமாக இருக்க இங்கு வரவில்லை.. இந்த நாடு விழுந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன். ஆம், மக்கள் விரும்பத்தகாத முடிவுகள் நாட்டின் நலனுக்காக எடுக்கப்படுகின்றன. அந்த முடிவுகளின் முக்கியத்துவத்தை பலர் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் புரிந்துகொள்வார்கள். வரிக்கு உட்பட்ட வருமான வரம்பு ஒரு இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரைக்கும் உயர்த்தப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். சம்பாதித்தவுடன் செலுத்தும் வரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இந்த வரிகள் விருப்பத்திற்கு ஏற்ப விதிக்கப்பட்டவை அல்ல. நாங்கள் விரும்பியதை செய்து நாட்டினை முன்னேற்ற முடியாது….” 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...