follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகாதலர் தின பணியில் பொலிசார்

காதலர் தின பணியில் பொலிசார்

Published on

காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக விருந்துகளை ஏற்பாடு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிசார் விழிப்புடன் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பார்ட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும், கலந்து கொள்வதற்கும் தடை இல்லை என்றாலும், கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், பொலிசார் உஷார் நிலையில் இருப்பார்கள், எனத் தெரிவித்திருந்தார்.

முகநூல் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பார்ட்டிகள் மற்றும் நிகழ்வுகளை சுற்றிவளைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“பார்ட்டிகளில் கலந்துகொள்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பங்கேற்பாளர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்க்க பொலிசார் பார்ட்டிகளில் சோதனை நடத்துவார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...