‘மைத்திரி பிச்சை எடுத்தால் சிறை செல்ல நேரிடும்’

1063

மைத்திரிபால சிறிசேன பணம் இல்லை என கதை அளக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. பணம் இல்லை என்று கதை அளக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் அவர் வாழ்வது அரேபிய சுல்தான் இனது வாழ்க்கை. அவரது பிள்ளைகள் வாழ்வதும் அப்படித்தான். கொழும்பில் வீடு, பொலன்னறுவையில் வீடு. வாகனங்கள்..

பொய்யான கதை பணம் இல்லை என்பது.. வீடுகள் இரண்டில் ஒன்றை ஏலம் இட்டாலே குறித்த பணம் கிடைக்கும். அவர் தனியாள் இல்லை. சகோதரர் இருக்கிறார். அவருக்கு 24 மணித்தியாலத்தில் அதனை கட்டி முடிக்கலாம். அதைவிட்டு காசு முட்டி பணம், பிச்சை எடுத்தல் என்று நாடகம் ஆடுகிறார்.

பிச்சை எடுப்பது என்பதும் சிறையில் அடைக்கக்கூடிய ஒரு தவறு தான். அடுத்த முறை பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் தான் அவர் சிறை செல்வார்..”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here