follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாகிறது

ஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாகிறது

Published on

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் பணம் செலுத்துதல் மற்றும் வசூல் செய்வதற்கு இலத்திரனியல் கொடுப்பனவுகளை கட்டாயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தொழில்நுட்ப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இராஜாங்க அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பொதுமக்கள் அரச நிறுவனங்களுக்குச் சென்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் இலத்திரனியல் பணம் செலுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் பல அரச நிறுவனங்களில் இல்லை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் திட்டத்தை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது, அதன்படி எதிர்காலத்தில் பொதுத்துறையில் அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சேகரிப்புகளுக்கு மின்னணு கட்டண வசதியை வழங்குவது கட்டாயமாகும்.

தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஜானக சம்பத் கீகியானகே கூறுகையில், எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் தேவையான தொழிநுட்ப வழிகாட்டல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிதி அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை தயாரித்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...