கப்ராலுக்கு எதிரான பயணத்தடை நீடிப்பு

264

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நீடித்துள்ளது.

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக ராஜித கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜித் நிவார்ட் கப்ரால் சார்பில் முன்வைக்கப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பிலான உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here