follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பலாங்கொடையில் ஏற்படும் திடீர் மரணங்களில் 70% மாரடைப்பாகும்

பலாங்கொடையில் ஏற்படும் திடீர் மரணங்களில் 70% மாரடைப்பாகும்

Published on

பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக கருத்துப்படி, பலாங்கொடை பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாரடைப்பு காரணமாக 30-50 வயதுக்கு இடைப்பட்ட 100% மரணங்கள் மாரடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ளன.

இந்த தரவுகளின்படி, மாரடைப்பால் இறக்கும் போக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களிடையே அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இளைஞர்கள் மற்றும் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் வயதான பின்னரே இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அக்கருத்தை மாற்ற வேண்டும் எனவும் ஒரு கருத்து நிலவுவதாக மரண விசாரணை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றில் வீக்கம், மயக்கம், வலிப்பு ஏற்பட்டால் இரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

30-50 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மேற்குறிப்பிட்ட அவசரகால நிலைமைகளுடன் ஏற்படும் மாரடைப்புகளில் இருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டுமென பத்மேந்திர விஜேதிலக்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...