சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாம் வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை வகுப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (15) இரவு பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த முதலாம் வருட முகாமைத்துவ பீட மாணவர்கள் குழுவிற்கும் பல்கலைக்கழக மாணவர் குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தாக்குதலுக்குள்ளானதில் காயமடைந்த ஒன்பது மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களைக் கைது செய்ய சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.