follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்"

“இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்”

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேயவர்த்தன கடந்த செவ்வாயன்று கண்டி மல்வத்து – அஸ்கிரி தேரர்களை சந்திக்கச் சென்றிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கேட்டிருந்தார்;

“தலைவரே, நீங்கள் எதிர்வு கூறலில் கில்லாடி, உங்கள் எதிர்வுகூறல் பிரகாரம் நீங்கள் கடந்த காலங்களில் கூறினீர்கள், எங்களுக்கு ஒரு ஆசனம் தான் உள்ளது. அந்த ஆசனத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்து, பின்னர் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி ஜனாதிபதி பதவியிலும் அமர்த்துவதாக தெரிவித்திருந்தீர்கள். அது அப்படியே நடந்து விட்டதே..”

அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன;

” நான் எதிர்வுகூறுபவன் அல்ல, நான் ஒரு அரசியல்வாதி. சொல்லப் போனால் இன்னும் 12 வருடங்களுக்கு மக்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்.. ரணில் விக்கிரமசிங்கவுக்கே நாட்டினை ஆட்சி செய்யக் கொடுத்தால், இலங்கை ஆசியாவில் மட்டுமல்லாது உலகிலேயே மிகவும் பலம் பொருந்திய பொருளாதாரத்தினை கொண்ட நாடாக மாற்றும் ஆளுமை அவருக்கு உண்டு..” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...

அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் – நாமல்

அரசாங்கத்தின் செயலிழப்பு மற்றும் குறைபாடுகளை மறைப்பதற்காக, அரச ஊழியர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம்

செம்மணிப் போராட்ட களத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியல் சாக்கடையில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணம் என...