follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுபண்டி உரம் குறித்து அமைச்சரவை பத்திரம்

பண்டி உரம் குறித்து அமைச்சரவை பத்திரம்

Published on

இவ்வருடம் 50 கிலோ கிராம் MOP உர மூட்டை ஒன்றின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2022/23 உயர் பருவத்தில் 42,000 மெட்ரிக் தொன் பண்டி உரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன் பண்டி உரம் ஒரு கோணியின் விலை 19,500 ரூபாவாகும். அப்போதைய உலக உர விலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட்டாலும், அதிக விலை காரணமாக பல விவசாயிகள் பண்டி உரங்களை வாங்கவில்லை.

பண்டி உரம் இருப்பில் இருந்து இதுவரை 3,00 மெட்ரிக் தொன் அல்லது மொத்த உர இருப்பில் 10 சதவீதத்திற்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இம்முறை சில நெற்பயிர்களில் பயிர் மஞ்சள் நிறமாக காணப்படுவதற்கு பண்டி உரம் இடாதமையே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...