follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

Published on

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐத் தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தற்காலிக தரவுகளின்படி, பெப்ரவரி 1 மற்றும் 14 க்கு இடையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 54,685 ஆகும்.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது சுமார் 15 சதவீத வளர்ச்சியாகும். 2022 பெப்ரவரி 1 முதல் 14 வரை 47,282 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 14 வரையிலான மொத்த வருகைகள் 157,230 ஆகும், இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், அந்தக் காலத்திற்கான ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 129,609 ஆக இருந்தது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் வாராந்திர ஆய்வும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. பெப்ரவரி முதல் வாரத்தில் (1 – 7) 26,506 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இரண்டாவது வாரத்தில், எண்ணிக்கை 28,179 ஆக உயர்ந்துள்ளது.

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மொத்த வருகையில் 26 வீதத்தைக் கொண்டு, இலங்கைக்கான மிகப் பெரிய சுற்றுலாப் போக்குவரத்து உருவாக்கியாக ரஷ்ய கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...