follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

Published on

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000ஐத் தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தற்காலிக தரவுகளின்படி, பெப்ரவரி 1 மற்றும் 14 க்கு இடையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 54,685 ஆகும்.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது சுமார் 15 சதவீத வளர்ச்சியாகும். 2022 பெப்ரவரி 1 முதல் 14 வரை 47,282 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 14 வரையிலான மொத்த வருகைகள் 157,230 ஆகும், இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 21 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில், அந்தக் காலத்திற்கான ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 129,609 ஆக இருந்தது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் வாராந்திர ஆய்வும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. பெப்ரவரி முதல் வாரத்தில் (1 – 7) 26,506 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இரண்டாவது வாரத்தில், எண்ணிக்கை 28,179 ஆக உயர்ந்துள்ளது.

பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மொத்த வருகையில் 26 வீதத்தைக் கொண்டு, இலங்கைக்கான மிகப் பெரிய சுற்றுலாப் போக்குவரத்து உருவாக்கியாக ரஷ்ய கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...