follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஹம்பாந்தோட்டை மேயர் பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநீக்கம்

ஹம்பாந்தோட்டை மேயர் பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநீக்கம்

Published on

ஹம்பாந்தோட்டை மேயர் காமினி ஸ்ரீ ஆனந்தாவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துமாறும், ஹம்பாந்தோட்டை மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரை நீக்குமாறும், மேயர் பதவியிலிருந்தும் நீக்குமாறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.

மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹம்பாந்தோட்டை நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்தமையினால் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்திடமிருந்து தாம் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக கடிதம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டமை உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் வரை அந்த பதவியில் நீடிப்பதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தன்னிடம் விளக்கம் கேட்டதாகவும் ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மேயர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவுக்குப் பின் அவர் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...