ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் அதன் 7 அமைப்பாளர்கள் மற்றும் அதில் கலந்துகொள்பவர்கள்
இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலிமுகத்திடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் குறித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.