follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுசரணவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

சரணவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

Published on

தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும் போது, ​​தேசிய லொத்தர் சபையின் மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமைக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் பின்னர் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த உத்தரவிட்டார்.

அதன் பின்னர், வழக்கு விசாரணைக்காக மார்ச் 23ஆம் திகதிக்கு அழைக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 2007 ஜூலை 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேசிய லொத்தர் சபையின் மூன்று வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 3,510,000 ரூபா நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...