follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதேசிய பாதுகாப்பு சபை குறித்து புதிய தீர்மானம்

தேசிய பாதுகாப்பு சபை குறித்து புதிய தீர்மானம்

Published on

பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு சபையை சட்டப்பூர்வமாக்குவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தேசிய பாதுகாப்புச் சபையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.

மேலும், தேசிய பாதுகாப்பு சபையில் தேசிய பாதுகாப்பு தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு, பொருளாதார மற்றும் இராணுவ கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கான முதன்மை நிர்வாக நிறுவனமாகும்.

தேசிய பாதுகாப்பு சபையை அரசியலமைப்பு அடிப்படையிலும் தெளிவான அமைப்பிலும் நிறுவ வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றம் மேலும் பரிந்துரைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...