follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுதுஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

துஷான் குணவர்தனவிடம் சிஐடி வாக்குமூலம்

Published on

லங்கா சதொச வெள்ளைப்பூண்டு மோசடியை வௌிப்படுத்திய நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

லங்கா சதொசவுக்கு உரித்தான கொள்கலன்கள் சட்டவிரோதமாக வௌியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு அரசியல் ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிப்பதால் தன்னால் சுயாதீனமாகக் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து துஷான் குணவர்தன அண்மையில் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியிலிருந்து விலகி இருந்தார்.

இதேவேளை, துஷான் குணவர்தன முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று நீதிமன்றுக்கு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சட்டவிரோதமான...