follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு நிவாரணம் வழங்குவதில் சவூதி உள்ளிட்ட நாடுகள் கவனம்

இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதில் சவூதி உள்ளிட்ட நாடுகள் கவனம்

Published on

உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உச்சி மாநாடு இன்று (22) ஆரம்பமாகிறது.

தற்போது ஜி 20 குழுவின் தலைவராக இந்தியா உள்ளது, அதன் உச்சி மாநாடு பெங்களூரில் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இந்த மாநாட்டில் பரிசீலிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளபடி, இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் தடையாக உள்ள விடயங்கள் இந்த சந்திப்பில் பரிசீலிக்கப்படவுள்ளதுடன், சீனா உள்ளிட்ட நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும் இந்த சந்திப்பில் இணையவுள்ளன.

மாநாட்டுடன், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, இந்தியா, சீனா, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகளின் ஆன்லைன் சந்திப்பும் நடைபெறவுள்ளது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடன் மறுசீரமைப்புக்கான பொதுவான தரநிலைகள் குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கு இது திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...