follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடு"பென்டகன் பிரதிநிதிகள் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை நிராயுதபாணியாக்கினர்"

“பென்டகன் பிரதிநிதிகள் அரச புலனாய்வு சேவை அதிகாரிகளை நிராயுதபாணியாக்கினர்”

Published on

அண்மையில் இரண்டு விசேட விமானங்களில் இலங்கை வந்த பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் குழு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பல கேள்விகளை இன்று(21) பாராளுமன்றில் எழுப்பினார்.

இவர்கள் ஏன் இலங்கைக்கு வந்தனர் என பிரதானமாக கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,இந்தக் குழு இலங்கைக்கு வந்தது தொடர்பில் அரசாங்கம் பொறுப்பான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு தெரிவித்தார்.

இந்தக் குழுவினர் அரச புலனாய்வு சேவை அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அங்கு அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்டதாகவும், அமெரிக்கப் பிரதிநிதிகள் ஆயுதம் ஏந்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்தக் குழுவின் வருகை குறித்து வெளிவிவகார அமைச்சர் அறிந்தாரா என வினவியபோது, ​​அது தொடர்பில் தனக்குத் தெரியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...