follow the truth

follow the truth

July, 24, 2025
Homeஉள்நாடுபொறியாளர்களுக்கு போனஸ் வழங்க மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை

பொறியாளர்களுக்கு போனஸ் வழங்க மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை

Published on

மின் கட்டணத்தினை அதிகரித்தது பொறியியலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அல்ல என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திலும் மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“.. ஓராண்டாக மின்வெட்டு நிறுத்தப்பட்டது. எங்களுக்கு கூடுதல் பணம் மானியமாக வழங்கப்படவில்லை. செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். கட்டண திருத்தத்திற்குப் பிறகு, நாங்கள் கடன் வாங்க முடிந்தது. முக்கிய வங்கிகள் தேவையான நிதியை வழங்கின. அதன்படி, கொஞ்சம் எரிபொருள் வாங்கப்பட்டது. இந்த நாட்டில் தொடர்ந்து மின்சாரம் வழங்க கூடாது என சிலர் விரும்புகின்றனர். பொறியாளர்கள் சங்கம் போனஸ் கேட்கிறது. மேலதிக நேர கொடுப்பனவுகளை கேட்கின்றனர்.அது கிடைக்காத போது வீதியில் இறங்கி விடுவதாக கூறுகின்றனர். மின் கட்டணத்தை உயர்த்தியது போனஸ் அல்லது சலுகைகளுக்காக அல்ல. ..” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு...

சிக்குன்குன்யா வைரஸ் குறித்து WHO எச்சரிக்கை

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே புரட்டிப் போட்ட கொசுக்களால் பரவிய 'சிக்குன்குன்யா' வைரஸ் மீண்டும் ஒரு தொற்றுநோய் பரவாமல்...

பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி

நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை...