follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுவயோதிபர்களுக்கு நிவாரணம்

வயோதிபர்களுக்கு நிவாரணம்

Published on

வயோதிபர்களின் நிலையான வைப்புத்தொகைக்கு அறவிடப்படும் நிறுத்திவைப்பு வரி தொடர்பில் இன்று (24) சில நிவாரணங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நிலையான வைப்புத்தொகை முதலானவற்றுக்கு ஐநூறு ரூபா காப்பு வரி அறவிடப்படும் எனவும், ஓராண்டுக்குப் பின்னர் வழங்கினாலும், அந்த வரி நீக்கப்பட்டால் மக்களுக்கு நிம்மதியாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு விதிக்கப்படும் வரியை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றார்.

முடிந்த போதெல்லாம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி 20 ஆம் திகதி வரையான வருமானம் மற்றும் செலவினங்களுக்கிடையேயான வித்தியாசம் 450 பில்லியன் ரூபாவாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...