follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுசசி வீரவன்சவிடம் இருந்து நீதிமன்றத்திற்கு மருத்துவ அறிக்கை

சசி வீரவன்சவிடம் இருந்து நீதிமன்றத்திற்கு மருத்துவ அறிக்கை

Published on

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவுக்கு சுகயீனம் காரணமாக 03 நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவ அறிக்கை ஒன்று இன்று (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுத்த போது சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சுகயீனம் காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும் அவருக்கு 03 நாட்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...