follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுஏழு மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

ஏழு மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலி

Published on

முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பார் குறியீடுகளை ஸ்கேன் செய்வதற்கும் 7 மொழிகளைக் கொண்ட புதிய சுற்றுலா மொபைல் செயலியை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்போது, பொலிசார் செயலியை கண்காணித்து ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள்எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, உள்ளூர் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன், இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை வழங்குவதற்காக மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பணம் செலுத்தும் முறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையில் நடத்தப்படவுள்ள பல சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் தயாரிப்பு உட்பட சுற்றுலாத்துறையின் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் அமைச்சர் இதன்போது பகிர்ந்து கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...