follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு

கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு

Published on

இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு வழங்கப்படும் கடன்களை மறுசீரமைப்பது தொடர்பில் அமெரிக்க மற்றும் சீன நிதித்துறை அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ஜி20 நிதி மாநாட்டை ஒட்டி இந்த விவாதம் நடைபெற்றது.

அமெரிக்கா மற்றும் சீனாவின் நிதித்துறை அதிகாரிகளும் இதில் இணைந்திருந்தனர்.

இந்த இரண்டாம் கட்ட கலந்துரையாடலில் சீன கடன் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு சீனா வழங்கிய கடன்களை மறுசீரமைப்பதை அமெரிக்கா தாமதப்படுத்தியதாக அமெரிக்கா விமர்சனம் செய்த பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய கடன் வழங்குனராகக் கருதப்படும் சீனா, ஜி20 நாடுகளை இந்தப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து, திறம்படத் தீர்க்க தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...