follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1மார்ச் 8 முதல் தொடர் வேலை நிறுத்தம்

மார்ச் 8 முதல் தொடர் வேலை நிறுத்தம்

Published on

வரிக் கொள்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வரிக் கொள்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள்,பொறியாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் என அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வல்லுநர்கள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளனர். மார்ச் முதலாம் திகதி அனைத்து துறைகளிலும் ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் கூட்டமைப்பும் இணைந்து கொள்கிறது.

ஏனைய தொழிற்சங்கங்களை தொடர் வேலை நிறுத்தத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (27) இடம்பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் தொழில் நடவடிக்கை குறித்து அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தொழிற்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் நேற்று (26) தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...