ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனு தொடர்பான உத்தரவு

416

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர் பரிசீலிக்குமாறு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எஸ் துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் இந்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here