ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து புதிய கூட்டணி : ஹரீன் சவால்

773

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓரிரு வாரங்களுக்குள் புதிய கூட்டணி அமைக்கப்படும் என காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) பதுளையில் தெரிவித்தார்.

“.. ரணில் விக்கிரமசிங்கவும் நானும் ஐக்கிய மக்கள் சக்தியினை உடைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.நான் இன்னும் சிலரை அழைத்து வந்திருக்கலாம், ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் சமீபத்தில் நான் அவரை ஹிக்கடுவையில் சந்தித்து, போது வரவுள்ளவர்களை எடுப்போம் இனியும் தாமதம் வேண்டாமே என்றேன்”

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பதுளை மாவட்ட வேட்பாளர்களின் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையில் பதுளை ரிவர்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here