“போராட்டத்தின் போது ஒருவர் தவறி விழுந்து காயமடைவது வழக்கம்”

271

போராட்டங்களின் போது குறைந்தபட்ச பலத்தை அவர்கள் அறிந்த விதத்தில் பயன்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதாவது இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல உள்ளூராட்சி சபைக்கான வேட்பாளர் ஒருவர் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டமை குறைந்தபட்ச பலத்தின் பிரயோகமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படும் போது மே தின அணிவகுப்பைத் தவிர வேறு எந்த அணிவகுப்பையும் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் கீழ் அனுமதியில்லை.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர்;

“..விஹார மகாதேவி பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இலவச கூட்டங்களை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த உத்தரவையும் மீறி அவர்கள் கோட்டையை நோக்கி நேராக அணிவகுத்துச் செல்லும் போதே அவர்களைத் தடுக்க குறைந்த சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

எந்த வகையிலும் தடியடி நடத்தாமல், கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரை தாக்குதலைப் பயன்படுத்தியதாக தெரிவித்தனர். சிறு ஆர்ப்பாட்டங்களில் கூட தடியடி நடத்தி விரட்டியடிக்கும் சமயத்தில் அவ்வாறு இவர்களுக்கு செய்யவில்லை.

போராட்டத்தின் போது ஒருவர் தவறி விழுந்து காயமடைவது வழக்கம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யக் கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here