தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கி நாடு தழுவிய போராட்டங்கள்..

387

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (01) பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

துறைமுகம், பெட்ரோலியம், மின்சாரம், குடிநீர், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததுடன், மருத்துவ ரயில்வே ஆசிரியர்கள் மற்றும் அஞ்சல் துறை சங்கங்கள் இதில் சேராமல் போராட்டம் மட்டும் நடத்தப் போவதாக அறிவித்தன.

அதன்படி இன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பணிக்கு புறக்கணிக்கும் தொழில் நடவடிக்கையை துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளதுடன், அகில இலங்கை தாதியர் சங்கமும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழில் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

மேலும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள், தபால் திணைக்கள ஊழியர்கள் கறுப்பு உடை அணிந்தும், கறுப்பு பட்டை அணிந்தும் போராட்டம் நடத்தியதுடன், பல தொழிற்சங்கங்களும் இன்றைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here