சஜித் பிரேமதாசவின் தலைமை கேளிக்கைக்குரியது

298

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒரு பெரிய மாடு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதன் நிர்வாகச் செயலாளருமான கே.டி.லால்காந்த கூறுகிறார்.

சஜித் பிரேமதாச கூறுவது போல் மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் எங்கள் அரசின் கீழ் சுவீகரிக்கப்படாது என்றும் அவர் கூறுகிறார்.

அது சஜித் பிரேமதாசவுக்கும் தெரியும், ஆனால் அவர் எமது வெற்றியைத் தடுக்க எங்களை நோக்கி பொய்யான வதந்திகளை கூறி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் இப்படி சேறு பூசியிருக்கக் கூடாது என்றும், ஒரு தலைவனுக்கு அது அழகில்லை என்றும் தலைவனைப் பற்றி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், எங்கள் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தமாதிரி கீழான சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தி மாத்தளையில் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here