follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுதேர்தல் திகதி அறிவிப்பு ஒத்திவைப்பு

தேர்தல் திகதி அறிவிப்பு ஒத்திவைப்பு [UPDATE]

Published on

தேர்தல் திகதி அறிவிப்பு அடுத்த வாரம் முதல் சில நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.

ஆனால், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, திகதி நிர்ணயம் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர், ஊடக செயலாளர் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த வாரம் முதல் சில நாட்களில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் அதன் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் நிமல் ஜீ. புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டம் மூலம் 2023 தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, நிதி அமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...